ADDED : மே 13, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியொட்டி பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது.
விழாவையொட்டி காலை 6:00 மணிக்கு மூலவர் படைவீட்டம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு பின் 108 பேர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின், சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.