sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர்கள் காப்பியடிப்பதை ஊக்குவிக்கும் மினி ஜெராக்ஸ்

/

மாணவர்கள் காப்பியடிப்பதை ஊக்குவிக்கும் மினி ஜெராக்ஸ்

மாணவர்கள் காப்பியடிப்பதை ஊக்குவிக்கும் மினி ஜெராக்ஸ்

மாணவர்கள் காப்பியடிப்பதை ஊக்குவிக்கும் மினி ஜெராக்ஸ்


ADDED : மார் 29, 2025 04:35 AM

Google News

ADDED : மார் 29, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தமிழகத்தில் அரசு பொதுதேர்வில் 'பிட்' அடிப்பதை தடுக்க மினிஜெராக்ஸ் போடுவதை அரசு தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 அரசு பொதுதேர்வு முடிந்து,நேற்று முதல் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு நடந்து வருகிறது. கடந்த காலங்களில் அரசு தேர்வில் 'பிட்' அடிக்க விரும்பும் மாணவர்கள் புத்தகங்களை கிழித்தும், உடலில் எழுதியும் தேர்வு மையத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தெரியாமல் 'பிட்' அடிப்பார்கள்.

ஆனால் தற்போது நடக்கும் அரசு தேர்வுகளில் அதிகளவு மாணவர்கள் புத்தகங்களை மினி ஜெராக்ஸ் போட்டு எடுத்து வந்து தேர்வு எழுதுவதாக பல பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

புத்தகங்களை கிழித்து எடுத்து வருவது எல்லாம் பழைய மாடல் என்றும்,எங்களுக்கு எப்போதும் ஜெராக்ஸ் கடைகாரர்கள் தெய்வம் என்று மாணவர்கள் பேசி வருகின்றனர்.

மாணவர்கள் படித்து தேர்வு எழுதுவதில் ஆர்வம் காட்டுவதை விட, மினிஜெராக்ஸ் போட்டு எடுத்து வந்து காப்பியடிப்பதை பரவலாக பார்க்க முடிகிறது. தேர்வு முடிந்து வெளியில் வரும் மாணவர்கள், தாங்கள் எடுத்து சென்ற மினிஜெராக்ஸ்களை தேர்வு மையத்தில் வீசி விட்டு செல்கின்றனர்.

ஜெராக்ஸ் கடைகாரர்கள் சிறிய வருமானத்திற்காக மாணவர் சமுதாயத்தை வீணாக்கி வருகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் ஜெராக்ஸ் கடைகளில் மினி ஜெராக்ஸ் போடுவதை தடை செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us