sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதிய காய்கறி மார்க்கெட் திறக்க நகராட்சி வணிக வளாகம் இடிப்பு

/

புதிய காய்கறி மார்க்கெட் திறக்க நகராட்சி வணிக வளாகம் இடிப்பு

புதிய காய்கறி மார்க்கெட் திறக்க நகராட்சி வணிக வளாகம் இடிப்பு

புதிய காய்கறி மார்க்கெட் திறக்க நகராட்சி வணிக வளாகம் இடிப்பு


ADDED : ஜூலை 27, 2025 08:24 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 08:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் காய்கறி மார்க்கெட்டின் முகப்பில் இருந்த நகராட்சி வணிக வளாகம் இடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சிதம்பரம், வடக்கு மெயின்ரோட்டில் உள்ள அண்ணாதுரை கலையரங்கத்தின் முகப்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சியின் வணிக வளாகத்தில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலவீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அங்கு இயங்கி வரும் காய்கறி மார்க்கெட் அண்ணாதுரை கலையரங்க இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிகள் துவங்கி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

புதிய காய்கறி மார்க்கெட்டிற்கு பொருட்களை இறக்க வரும் கனரக வாகனங்கள் வந்து திரும்பும் வகையில், முகப்பில் இருந்த வணிக வளாகத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வணிக வளாகம் இடிக்கும் பணிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் காரணமாக வணிக வளாகத்தில் உள்ள வியாபாரிகளுக்கு மார்க்கெட்டின் உள்பகுதியில் கடைகள் கட்டி கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் புதிய காய்கறி மார்க்கெட் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us