sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தேசிய கொடி நாள் வசூல் துவக்கம்

/

 தேசிய கொடி நாள் வசூல் துவக்கம்

 தேசிய கொடி நாள் வசூல் துவக்கம்

 தேசிய கொடி நாள் வசூல் துவக்கம்


ADDED : டிச 08, 2025 06:03 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடிநாளினை முன்னிட்டு கொடிநாள் வசூல் நிகழ்ச்சி நடந்தது.

ஆண்டுதோறும் நாடெங்கிலும் டிச. 7 ம் தேதி முப்படை வீரர் கொடி நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாடு காத்த படைவீரர்களை நினைவு கொள்ளும் வண்ணம், இத்தினத்தில் முப்படைகளின் நிறம் பதித்த கொடிகள் பொதுமக்கள் அணியும் வண்ணம் வழங்கப்பட்டு, முப்படையினரை நினைவு கொள்ள வைக்கிறது. நேற்று கொடிநாள் 2025 உண்டியல் வசூல் தொடங்கி வைக்கப்பட்டது.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில், அவர்களை அழைத்து தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

கடந்தாண்டு 1 கோடியே, 35 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் வசூல் தொகை 1 கோடியே, 12 லட்சத்து 68 ஆயிரத்து 326 ரூபாய், (83.19 சதவீதம்) மாவட்ட துறை அலுவலர்களின் முயற்சியால் வசூல் செய்யப்பட்டது.

இந்த வசூலினை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வழங்கினார்.

கடந்த, 2024ம் ஆண்டில் 100 சதவீதம் இலக்கு எய்திய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.பி., ஜெயக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் அருள்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us