ADDED : ஜன 31, 2026 06:48 AM

நெய்வேலி: கடலுார் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, தாழம்பட்டு ஊராட்சியில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.13. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
இந்த கடையை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மலிவு விலை பொருட்களை வழங்கினார்.
அவர் பேசுகையில், ' கிராமங்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சாலை வசதி, குடிநீர் வசதி, தடையின்றி மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறோம்.
அந்த வகையில் தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த புதிய ரேஷன் கடை இப்பகுதி மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்,' என்றார்.
தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ் சுந்தரவடிவேல், எம்.ஜி.ஆர்., பக்கிரிசாமி, லோகநாதன், ரகுபதி, பழனிவேல், குமாரசாமி, ரகு, கருணாமூர்த்தி, கந்தசாமி, ரவி, சிவப்பிரகாசம், பழனிமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

