ADDED : ஜன 10, 2026 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே, புதிய சாலை பணி குறித்த ஆய்வு நடந்தது.
நெல்லிக்குப்பம் நகராட்சி, வான்பாக்கம் பகுதி நகரத்தில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் உள்ளது. அப்பகுதி சாலையை புதுப்பிக்க, ரூ. 72 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு கடந்த வாரம் பணி நடந்தது.
அப்பகுதி அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் தமிழ்மாறன் சாலை பணி தரமாக இல்லை எனக் கூறி புதியதாக போட்ட சாலையை கைகளாலேயே பிய்த்தெடுத்தார்.
இதுகுறித்து புகார் எழுந்ததால், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் லட்சுமி அந்த சாலையை ஆய்வு செய்தார். மேலும், பணிகள் நடக்கும் போது அதிகாரிகள் பணி தரமாக நடக்கிறதா என கண்காணிக்க வேண்டும் எனவும், உத்தரவிட்டார்.

