/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமூக வலைதளத்தில் கருத்து கேட் கீப்பருக்கு நோட்டீஸ்
/
சமூக வலைதளத்தில் கருத்து கேட் கீப்பருக்கு நோட்டீஸ்
சமூக வலைதளத்தில் கருத்து கேட் கீப்பருக்கு நோட்டீஸ்
சமூக வலைதளத்தில் கருத்து கேட் கீப்பருக்கு நோட்டீஸ்
ADDED : ஜூலை 11, 2025 02:16 AM
கடலுார்:ரயில் விபத்து நடந்த செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில், புதிதாக நியமிக்கப்பட்ட கேட் கீப்பர், தன்னிச்சையாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதால், ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளது.
கடலுார் அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில், பயணியர் ரயில், பள்ளி வேன் மீது மோதியதில் மூன்று மாணவர்கள் இறந்தனர்; ஒரு மாணவர் படுகாயமடைந்தார். ரயில் விபத்தில் தொடர்புடைய கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்றவுடன், 'கிராம மக்கள் தனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவியது. தன்னிச்சையாக எப்படி கருத்து கூறலாம் என விளக்கம் கேட்டு, அவருக்கு ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

