/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சத்துணவு ஓய்வூதியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஓய்வூதியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 15, 2025 11:16 PM
கடலுார்: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நடராஜன், ராதாகிருஷ்ணன், மணிதேவன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரங்கசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பாலகிருஷ்ணன், குப்புசாமி, குமார், அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்பு ஓய்வூதியம் 6,750 ரூபாயை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.