நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; பால் வாங்க நடந்து சென்றவர், அரசு பஸ் மோதி இறந்தார்.
கடலுார், முதுநகர் அடுத்த தைக்கால் தோணித்துறையைச் சேர்ந்தவர் மாரிமுத்து,40; இவர், பால் வாங்க தனது வீட்டில் இருந்து பச்சையாங்குப்பம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கடலுாரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த புதுச்சேரி அரசு பஸ் மோதியதில் தலை மற்றும் கையில் காயமடைந்தார்.
உடன், அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து நுழைவு வாயில் அருகில் வந்த போது, அவர் மயங்கி விழுந்து இறந்தார். புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.