/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர் ஒத்துழைப்பு அவசியம்: கலெக்டர்
/
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர் ஒத்துழைப்பு அவசியம்: கலெக்டர்
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர் ஒத்துழைப்பு அவசியம்: கலெக்டர்
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர் ஒத்துழைப்பு அவசியம்: கலெக்டர்
ADDED : நவ 24, 2024 05:17 AM
நெல்லிக்குப்பம் : வரக்கால்பட்டு ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் மனோகர் வரவேற்றார். கிராம சபையில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசியதாவது: ஊராட்சி குளத்தை துார் வாருவது, சாலை, குடிநீர் உள்ளிட்ட புகார்களை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து விரைவில் தீர்வு காணப்படும். இங்குள்ள அரசு பள்ளியில் கடந்தாண்டு நடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். வரும் ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்.
பல பள்ளிகளில் மாணவர்கள் விடுமுறை எடுப்பது அதிகமாக உள்ளது. பிள்ளைகளை ஒழுங்காக பள்ளிக்கு அனுப்பி, நன்றாக படிக்க வைக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உள்ளது. மாணவர்களின் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும் என்றார்.
மகளிர் சுய உதவி குழுவினர் வைத்திருந்த ஸ்டாலை பார்வையிட்ட கலெக்டர் அங்கிருந்த ஒரு ஒயர் கூடையை தனது சொந்த பணத்தை கொடுத்து வாங்கினார்.
அதனைக் கண்ட ஊராட்சி தலைவர் ஒரு உண்டியலை வாங்கி, அதனை கலெக்டர் மூலம் ஒரு சிறுவனுக்கு வழங்கி சிறுசேமிப்பின் அவசியத்தை உணர்த்தினர்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை துணை இயக்குனர் சபானா அஞ்சு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

