/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டை, உடைசல் சிறப்பு பஸ்கள் அச்சத்துடன் பயணித்த பயணிகள்
/
ஓட்டை, உடைசல் சிறப்பு பஸ்கள் அச்சத்துடன் பயணித்த பயணிகள்
ஓட்டை, உடைசல் சிறப்பு பஸ்கள் அச்சத்துடன் பயணித்த பயணிகள்
ஓட்டை, உடைசல் சிறப்பு பஸ்கள் அச்சத்துடன் பயணித்த பயணிகள்
ADDED : ஜன 15, 2025 12:25 AM

பண்டிகை நாட்களில் தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதுபோல், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் நல்ல நிலையில் உள்ள பஸ்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்பிவிட்டு, காயலாங்கடைக்கு செல்லும் நிலையில் உள்ள தகர டப்பா பஸ்களை உள்ளூரில் இயக்குவது வழக்கமாகி விட்டது.
அதுபோல், சூரிய பொங்கல் பண்டிகையான நேற்று, விருத்தாசலத்தில் இருந்து கடலுாருக்கு இயங்கிய அரசு பஸ்சில், (டி.என் 72 - என்1530) சீட்டுகள் பெயர்ந்தும், மூவர் மற்றும் இருவர் இருக்கையில் ஒவ்வொரு சீட்டுகள் இல்லாமலும், வெறும் கம்பிகள் மட்டுமே இருந்தன.
பண்டிகை காலம் என்பதால், வழக்கம்போல கூட்டம் இல்லாமல் இருந்ததால், பயணிகள் சிரமமின்றி தனித்தனி இருக்கையில் பயணித்தனர்.
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் இருந்து விருத்தாசலம் வந்த தடம் எண் 35 சி., டவுன் பஸ்சில் இரும்பு பட்டை பெயர்ந்து, பயணிகள் தலையை பதம் பார்க்கும் வகையில் அபாயகரமாக இருந்தது.
பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்கள் இயக்குகிறோம் என்ற பெயரில் வழக்கமான தடங்களில் காயலாங்கடையில் எடைக்கு போடும் பஸ்களை இயக்குவது வாடிக்கையாகி விட்டது.
இதுபோன்ற அபாயகர பயணத்தால் பொது மக்கள் பண்டிகை கால மகிழ்ச்சியை துறந்து, அச்சத்தில் பயணிக்கும் அவலம் ஏற்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.