/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூழாங்கற்கள் கடத்தல் லாரி பறிமுதல்
/
கூழாங்கற்கள் கடத்தல் லாரி பறிமுதல்
ADDED : டிச 11, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆலடி சப் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று கலர்குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி கள்ளத்தனமாக கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய லாரி டிரைவர் கலர்குப்பம் தேசிங்குராஜா, புதுப்பேட்டை வேல்முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

