ADDED : டிச 27, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் கழிவறையை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம், 20க்கும் மேற்பட்ட இடங்களில் பொது சுகாதார வளாகங் களை, பல கோடி செலவில் கட்டினர்.
இவை, திருவள்ளுவர் நகர் உட்பட சில இடங்களில் மட்டுமே மக்கள் பயன்பாட்டில் உள்ளன. அதையும் முறையாக பராமரிப்பதில்லை.
திருவள்ளுவர் நகர் பொது கழிவறை, செப்டிக் டேங் க் கடந்த, ஆறு மாதங்களாக சுத்தப்படுத்தப்படாமலேயே உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இது குறித்து சம்மந்தப் பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி க்கை விடுத்துள்ளனர்.

