/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு 23,013 மாணவர்கள் பங்கேற்பு
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு 23,013 மாணவர்கள் பங்கேற்பு
பிளஸ் 2 செய்முறை தேர்வு 23,013 மாணவர்கள் பங்கேற்பு
பிளஸ் 2 செய்முறை தேர்வு 23,013 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 08, 2025 12:25 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நடந்த பிளஸ் 2 செய்முறை தேர்வில் 23,013 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கடலுார் மாவட்டத்தில் 205 பள்ளிகளில் பிளஸ் 2வில் 30,159 மாணவர்களும், பிளஸ் 1ல் 30,499 மாணவர்களும், பத்தாம் வகுப்பில் 32,954 மாணவர்களும் படித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று பிப்.,7ம் தேதி முதல் வரும் 14ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் 15 முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 22 முதல் 28ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 இயற்பியல் பாடப் பிரிவிற்கான செய்முறை தேர்வு 121 மையங்களில் நடந்தது. தேர்வில் 23,013 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.