sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மர்மமான முறையில் இறந்து கிடந்த தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கு பதிய பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

/

மர்மமான முறையில் இறந்து கிடந்த தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கு பதிய பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

மர்மமான முறையில் இறந்து கிடந்த தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கு பதிய பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

மர்மமான முறையில் இறந்து கிடந்த தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கு பதிய பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 27, 2024 11:03 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தி.மு.க., நிர்வாகி மர்மமான முறையில் இறந்துகிடந்ததை கொலை வழக்காக பதிவு செய்து, விசாரிக்கக்கோரி பா.ம.க.,வினர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடுவீரப்பட்டு அடுத்த என்.மூலக்குப்பத்தை சேர்ந்தவர் ஞானகுமார், 53; விவசாயி. தி.மு.க., கிளை கழக செயலாளரான இவர் கடந்த 25ம் தேதி இரவு தனது மோட்டார் கொட்டகைக்கு துாங்க சென்றார். இதையடுத்து, நேற்று முன்தினம் காலை சமட்டிக்குப்பத்தில் ஞானகுமார் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் சந்தேகம் மரணம் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை

பா.ம.க., மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் மற்றும் ஞானகுமார் உறவினர்கள் கடலுார் அரசு மருத்துவமனை எதிரே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த டி.எஸ்.பி.,க்கள் ரூபன்குமார், சபியுல்லா மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஞானகுமார் இறப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தேகம் மரணம் என்பதை

கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். அதற்கு போலீசார், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து,

ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us