/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ
/
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ
ADDED : அக் 30, 2025 11:18 PM
கடலுார்:  சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த அங்காளன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் ரமேஷ்,25;  இவர் 17வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த நான்கு ஆண்டு களாக காதலித்து வந்தார்.
அவருடன் நெருங்கி பழகியதில் சிறுமி கர்ப்பமடைந்தார். கடந்த 24ம் தேதி, திருவந்திபுரம் கோவிலில் திருமணம் செய்துகொண்டு, கடலுாரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஊர்நலஅலுவலர் தெய்வானை விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சிறுமியை திருமணம் செய்து கொண்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.
புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் ரமேஷ் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

