sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இறந்த குழந்தையுடன் திரிந்த தாய்: வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை  

/

இறந்த குழந்தையுடன் திரிந்த தாய்: வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை  

இறந்த குழந்தையுடன் திரிந்த தாய்: வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை  

இறந்த குழந்தையுடன் திரிந்த தாய்: வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை  


ADDED : ஜூன் 20, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த ஆடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பச்சையம்மாள்,40. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக திண்டிவனத்தைச் சேர்ந்த உறவினர் ஜீவா,30, என்பவர் வந்தார். அவர் பச்சையம்மாள் மற்றும் குழந்தைகளை தான் பார்த்துக்கொள்வதாக கூறி உடன் அழைத்துச்சென்றார்.

அதன்பின், 17ம் தேதி இரவு பாலமுருகனின் மூன்றாவது பெண் குழந்தை,3, ரோஷினி இறந்துவிட்டதாகவும், எனவே அனைவரையும் பஸ்சில் ஊருக்கு அனுப்பிவைக்கிறேன் எனக்கூறினர். இதனால் பாலமுருகன் மற்றும் உறவினர்கள் கடலுார் பஸ்நிலையத்திற்கு வந்தனர். அப்போது உழவர் சந்தை அருகே பச்சையம்மாள் இறந்த குழந்தை ரோஷினியை துாக்கிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். பாலமுருகனின் உறவினர்கள் இறந்த ரோஷினியின் உடலை பார்த்த போது உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்தனர்.

எனவே குழந்தையின் சாவில் மர்மம் உள்ளதாகக்கூறி, கடலுார் புதுநகர் போலீஸ்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடலுார் புதுநகர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திண்டிவனத்தைச்சேர்ந்த ஜீவா,30, இறந்த குழந்தையின் தாய் பச்சையம்மாள் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குழந்தை ரோஷினி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதற்கான காரணம், எப்படி நடந்தது என்பது குறித்து திண்டிவனத்தில் குழந்தைகள் தங்கியிருந்த இடத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us