/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு
/
வாலிபரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு
ADDED : ஜூலை 18, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: வாலிபரை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்
குறிஞ்சிப்பாடி அடுத்த ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர் திரிசங்கு மகன் கிருபாகரன், 22; இவருக்கும் வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்த மதியழகனுக்கும் முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், ஆயிப்பேட்டை- வெங்கடாம்பேட்டை சாலை சந்திப்பில் டாடா ஏஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்த கிருபாகரனை, மதியழகன், இவரது நண்பர்கள் சந்தோஷ், சதீஷ் ஆகியோர் வழிமறித்து தாக்கினர்.
புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், மதியழகன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

