sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 2 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு: மர்ம நபருக்கு போலீசார் வலை

/

 2 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு: மர்ம நபருக்கு போலீசார் வலை

 2 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு: மர்ம நபருக்கு போலீசார் வலை

 2 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு: மர்ம நபருக்கு போலீசார் வலை


ADDED : நவ 18, 2025 06:35 AM

Google News

ADDED : நவ 18, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே இரண்டு அரசு பஸ்கள் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த பள்ளிப்பேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம், 50; அரசு பஸ் டிரைவர். இவர் கடந்த 15ம் தேதி இரவு சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலுார் நோக்கி வந்து கொண்டிருந்தார். பஸ் நள்ளிரவு 12.10 மணிக்கு பெரிய கங்கணாங்குப்பம் அருகே வந்தபோது, மர்ம நபர் ஒருவர் கல் வீசியதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

இதில் பஸ்சில் பயணம் செய்த சீர்காழியைச் சேர்ந்த மனோஜ், 28; என்பவர் காயமடைந்தார். உடனடியாக மனோஜ் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் கடலுார் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு அரசு பஸ் மீது கல்வீசப்பட்டதில் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.

ஒரே பகுதியில் அடுத்தடுத்து 2 அரசு பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து கல் வீசிய மர்மநபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us