/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாபர் மசூதி இடிப்பு தினம் போலீசார் பாதுகாப்பு
/
பாபர் மசூதி இடிப்பு தினம் போலீசார் பாதுகாப்பு
ADDED : டிச 06, 2025 06:55 AM

கடலுார்: மாவட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுதும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று கடலுார் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் வழிபாட்டுதலங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை செய்தனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் ரயில் நிலையங்கள் மற்றும் கடலுார் பஸ்நிலையம், ஆல்பேட்டை மற்றும் சோரியாங்குப்பம் சோதனைச்சாவடிகளில் போலீசார் வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
மாவட்டம் முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

