
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு:
வடலுார் எஸ்.டி.ஈடன் பள்ளியில் படித்து டி.என்.பி.எஸ்.சி., குருப்-1 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
வடலுார் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 படித்தவர் புவனேஸ்வரி. இவர், கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குருப்- 1 பி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் சுகிர்தா தாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக் தாமஸ், நியூதாட் அரிமா சங்கத்தினர் மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.