sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டில் சேர்ந்து பயன்பெற அறிவுறுத்தல்

/

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டில் சேர்ந்து பயன்பெற அறிவுறுத்தல்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டில் சேர்ந்து பயன்பெற அறிவுறுத்தல்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டில் சேர்ந்து பயன்பெற அறிவுறுத்தல்


ADDED : அக் 27, 2025 11:34 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்ட விவசாயிகள் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்திலுள்ள விவசாயிகள், நடப்பு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றைக் கொண்டு, இ-சேவை மையம் வாயிலாக பயிர் காப்பீடு செய்யலாம். இதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும், பயிர் மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகள் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்யலாம். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் அறிவித்துள்ள பயிர்களுக்கு பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பயிர்காப்பீடு திட்டத்தில் சேரலாம். பயிர்க்கடன், வேளாண் நகைக்கடன் பெறாத விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் பயிர்காப்பீடு திட்டத்தில் சேரலாம்.

பயிர் காப்பீடு செய்ய முன்மொழிவுப் படிவம், விண்ணப்பப் படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல் (அ) இ அடங்கல், ஆதார் அட்டை நகல், ஆதார் எண் இணைக்கப்பட்ட மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவை தேவையான ஆவணங்களாகும்.

அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொது சேவை மையங்கள் ஆகிய இடங்களில் பயிர் காப்பீடு கட்டணம் செலுத்தலாம்.

பயிர் காப்பீடு செய்ய ஏக்கர் ஒன்றுக்கு சம்பா நெற்பயிருக்கு 564 ரூபாயும், மக்காச்சோளத்திற்கு 380 ரூபாயும், பருத்திக்கு 449 ரூபாயும், உளுந்திற்கு 255 ரூபாயும் விவசாயிகள் செலுத்த வேண்டும்.

காப்பீடு செய்ய கடைசி தேதி மக்காச்சோளத்திற்கு வரும் 31ம் தேதியும், சம்பா நெல், பருத்தி, உளுந்திற்கு அடுத்த மாதம் 15ம் தேதி கடைசி நாளாகும். மேலும், இதுகுறித்த சந்தேகங்களுக்கு, அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us