sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

/

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


ADDED : நவ 14, 2025 07:14 AM

Google News

ADDED : நவ 14, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. 2025--26 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைசார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கான பெற்றோர் ஆண்டு வருமான வரம்பு 2.50 லட்சம் ரூபாய். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம், நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபாக்க வரும், 25ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) (National Schoalrship Portal) புதுப்பித்தல் விண்ணப்பம் என்ற இணைப்பில் (லிங்க்) சென்று பதிவு செய்து, 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பிக்கலாம்.

புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும், ஓ.டி.ஆர்., எண்ணை பயன்படுத்தி, 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து வி ண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us