/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிரிக்கெட்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
/
கிரிக்கெட்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
கிரிக்கெட்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
கிரிக்கெட்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : ஜூன் 11, 2025 07:57 PM

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், கொத்தட்டை ஊராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயராஜா முன்னிலை வகித்தனர்.
கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு, கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.விழாவில், பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், ரவி, சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.