ADDED : ஜன 23, 2026 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: பல்கலை., தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி வாசலில், மதியம் 12:30 மணியளவில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சவுமியா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அதில், அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் மற்றும் மறுமதிப்பீடு கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள், விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையேற்று, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

