sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பட்டா கேட்டு மறியல்: நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

/

பட்டா கேட்டு மறியல்: நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

பட்டா கேட்டு மறியல்: நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

பட்டா கேட்டு மறியல்: நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு


ADDED : ஆக 06, 2025 11:37 PM

Google News

ADDED : ஆக 06, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: பட்டா வழங்க வலியுறுத்தி சாலை மறியல் செய்ய மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக 95 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இவர்கள் தொடர்ந்து தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென போராடி வருகின்றனர்.

அந்த இடம் ஆங்கிலேயேர் காலத்தில் நடனபாதேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது.

எனவே அது கோவிலுக்கு சொந்தமானதால் பட்டா வழங்க முடியாது என ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கூறி வருவதால் பட்டா வழங்காமல் உள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையில் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரம் உள்ளதால் பட்டா வழங்க முடியாது என செயல் அலுவலர் தேவகி கூறினார்.

பட்டா வழங்கும் அதிகாரம் வருவாய் துறை அதிகாரிகளுக்கே உள்ளதால் அங்கு சென்று பேசிக் கொள்ளுங்கள் என இன்ஸ்பெக்டர் கூறி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் செய்ய குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.டி.ஓ.,விடம் பேசி பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்கிறேன் என இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us