ADDED : மார் 07, 2024 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
சங்கத் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் ரோட்டரி மாவட்ட ஆளுநர் செங்குட்டுவன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
விழாவில், முன்னாள் ஆளுநர் பிறையோன், முன்னாள் உதவி ஆளுநர் பூங்குன்றன், உதவி ஆளுநர் (தேர்வு) வெங்கடேசன், ஆலோசகர் ரமேஷ், முன்னாள் தலைவர் ஆறுமுகம், தலைவர் (தேர்வு) செந்தில் பாரதி, சங்க உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சந்தானகிருஷ்ணன், கீதா பிறையோன் மற்றும் ஆசைத்தம்பி, சுரேஷ் பாபு பங்கேற்றனர்.
ரவி நன்றி கூறினார்.

