ADDED : ஜூலை 08, 2026 03:20 AM

காட்டுமன்னார்கோவில்: குடிநீர் கேட்டு குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஊராட்சி ஒன்றியம் எடையார் ஊராட்சி உட்பட்ட பிள்ளையார்தாங்கல், வவ்வால்தோப்பு, சம்புராயபுத் துார் ஆகிய கிராமங்களில், கடந்த 4 தினங்களாக, ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கிராம மக்கள் விவசாய சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் நேற்று குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கிராம மக்களை அழைத்து பி.டி.ஓ., செந்தில்வேல் முருகன், குமராட்சி இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
