sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையில் கொட்டிய ஜல்லி பொதுமக்கள் கடும் அவதி

/

சாலையில் கொட்டிய ஜல்லி பொதுமக்கள் கடும் அவதி

சாலையில் கொட்டிய ஜல்லி பொதுமக்கள் கடும் அவதி

சாலையில் கொட்டிய ஜல்லி பொதுமக்கள் கடும் அவதி


ADDED : ஜூன் 16, 2025 12:46 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் சாலை பணிக்காக கொண்டு வரப்பட்ட ஜல்லிகளை சாலையிலேயே கொட்டி வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

நடுவீரப்பட்டு-வெள்ளக்கரை சாலையில் உள்ள நைனாப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி,அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் ஸ்டேஷன் ஆகியவைகள் உள்ளது. மேலும் குமளன்குளம், சஞ்சிவீராயன்கோவில், ராணிப்பேட்டை, கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் நடுவீரப்பட்டுக்கு வந்து செல்லும் பிரதான சாலையாகும்

இந்த சாலை வழியாக தான் தினமும் கனரக லாரிகள் அதிகளவு செம்மண் குவாரிக்கு வந்து செல்கிறது. நைனாப்பேட்டையில் புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது.

சாலை பணிக்காக வந்த ஜல்லியை சாலையிலேயே கொட்டப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எதிரில் வரும் வாகனங்கள் வழி விட்டு ஒதுங்க முடியாத நிலை உள்ளது. எனவே, ஜல்லிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us