ADDED : டிச 08, 2025 06:02 AM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: பத்திரக்கோட்டை கால்நடை மருத்துவமனை தினமலர் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையில் கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடத்தில், மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் கால்நடைகளுக்கு தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டது.
இது குறித்து தினமலர் நா ளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து உடனடியாக, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடம் துாய்மைப்படுத்தப்பட் டது.
