sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சி.என்.,பாளையம் வழியாக அரசு பஸ் இயக்க கோரிக்கை

/

 சி.என்.,பாளையம் வழியாக அரசு பஸ் இயக்க கோரிக்கை

 சி.என்.,பாளையம் வழியாக அரசு பஸ் இயக்க கோரிக்கை

 சி.என்.,பாளையம் வழியாக அரசு பஸ் இயக்க கோரிக்கை


ADDED : டிச 12, 2025 06:21 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: பண்ருட்டி-குள்ளஞ்சாவடிக்கு செல்லும் அரசு பஸ்சை சி.என்.பாளையம் வழியாக இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்ருட்டி - குள்ளஞ்சாவடிக்கு அரசு பஸ்தடம் எண்: 18 இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் பண்ருட்டியிலிருந்து நடுவீரப்பட்டு வழியாக குள்ளஞ்சாவடிக்கு இரண்டு தடவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ் நடுவீரப்பட்டிலிருந்து பண்ருட்டிக்கு காலை 10:00 மணிக்கு வந்து, பாலுார் வழியாகவும்,மாலை 4:00 மணிக்கு சி.என்.பாளையம் வழியாகவும் இயக்கப்பட்டு வருகிறது.

மீதி நேரத்தில் பண்ருட்டியிலிருந்து சாத்திப்பட்டு வழியாக குள்ளஞ்சாவடிக்கு இயக்கப்படுகிறது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் சுற்று பகுதியில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த பகுதியில் பண்ருட்டிக்கு செல்ல காலை 8:30 மணிக்கு வரும் அரசு பஸ்சை தவற விட்டால், அடுத்து மதியம் தான் பண்ருட்டிக்கு செல்ல பஸ் உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பண்ருட்டிக்கு, பாலுார் சென்று செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதனால் அரசு பஸ்சை காலை சி.என்.பாளையம், சாத்திப் பட்டு வழியாக பண்ருட்டிக்கு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us