/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இலங்கை அகதிகள் கலெக்டரிடம் கோரிக்கை
/
இலங்கை அகதிகள் கலெக்டரிடம் கோரிக்கை
ADDED : அக் 01, 2024 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: குள்ளஞ்சாவடி அருகே குடியிருக்கும் இடத்திலேயே வீடு கட்டி கொடுக்க வேண்டும் என, இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன் பேட்டையை சேர்ந்த இலங்கை அகதிகள் அளித்த மனு:
எங்களுக்கு ரங்கநாதபுரத்தில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டாம். அங்கு செல்வதற்கு வசதிகள் இல்லை. எனவே, தற்போது குடியிருக்கும் அம்பலவாணன்பேட்டை இருப்பிடத்திலேயே வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.