ADDED : பிப் 19, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே குளத்தில் சிக்கிய பசுமாட்டை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
மங்கலம்பேட்டையில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் ஆகாய தாமரை மற்றும் செடி கொடிகள் அதிகளவில் மண்டியுள்ளன.
இந்நிலையில், நேற்று அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு ஒன்று குளத்தில் சிக்கி கொண்டது. தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி, குளத்தில் சிக்கிய பசு மாட்டை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

