ADDED : மார் 19, 2025 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுாரில் என்.எல்.சி., ஓய்வு பெற்றோர் நலக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நலக்குழு பொதுச் செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பொருப்பாளர்கள் சீனுவாசன், ஆனந்தராஜ், பொருளாளர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
குறைந்த பட்ச பென்ஷன் 9,000 ரூபாய் வழங்க வேண்டும். ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு சலுகை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின், கோரிக்கைகள் அடங்கிய மனு வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் வழங்கினர்.