ADDED : நவ 10, 2024 06:56 AM

நெய்வேலி : வி.கே.டி., சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்திட வலியுறுத்தி மா.கம்யூ.,வினர் நெய்வேலியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
மா.கம்யூ., சார்பில் வி.கே.டி., சாலை போராட்டக்குழுவினர் நேற்று காலை 11:00 மணியளவில் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்குழு தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், வி.சி., கட்சி நெய்வேலி தொகுதி அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் மருதமுத்து, ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் பிச்சை,என்.எல்.சி., - சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க தலைவர் ஜெயராமன், பொதுச் செயலாளர் திருஅரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் வி.கே.டி., சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
டி.எஸ்.பி., சபியுல்லா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை செய்ததைத் தொடர்ந்து, 11:30 மணியளவில் கலைந்து சென்றனர்.