ADDED : நவ 27, 2024 06:32 AM
நெய்வேலி : நெய்வேலியில் புட்டபர்த்தி சத்திய சாய் பாபாவின் 99வது பிறந்தநாள் விழா ஸ்ரீ சத்திய சாய் சேவா சமிதி சார்பில் கொண்டாடப்பட்டது.
நெய்ேவலி டவுன்ஷிப் வட்டம் 8 ல் உள்ள ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி கோவிலில், பாபாவின் 99 வது பிறந்த நாளையொட்டி ஆதர்சன சொர்ண பைரவர் ஹோமத்துடன் விழா துவங்கியது. என்.எல்.சி., மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் தலைமை தாங்கினார். நெய்வேலி ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதியின் கன்வீனர் டாக்டர் பாலராம் சப்பிரமணியம் வரவேற்றார். என்.எல்.சி., மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. மேட்டுக்குப்பத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. வடலுார் சத்திய ஞான சபை அருகே தங்கியிருந்த ஏழைகள் அனைவருக்கும் போர்வைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனங்களின் கடலூர் மாவட்ட தலைவர் சாய் பிரசாத் செய்திருந்தார்.

