ADDED : செப் 09, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
இணைப்பு உள்ளது
நடுவீரப்பட்டு, செப்.10–
மணல் கடத்திய டிப்பர் லாரி மற்றும் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் பெர்னாண்டஸ் தலைமையிலான குறுவினர் நேற்று முன்தினம் இரவு கடலுார் அடுத்த குமளங்குளம்–குழந்தைக்குப்பம் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, டிஎன்.31–ஏடி–9753 பதிவெண் கொண்ட டிப்பர் லாரியின் டிரைவர், அதிகாரிகளை கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். லாரியை சோதனை செய்ததில், 3 யூனிட் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. அதன்பேரில் அதிகாரிகள், லாரியை மணலுடன் பறிமுதல் செய்து நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய டிரைவரை தேடிவருகின்றனர்.
