/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சர்வ சக்தி விநாயகர் கோவில் 5ம் தேதி கும்பாபிேஷகம்
/
சர்வ சக்தி விநாயகர் கோவில் 5ம் தேதி கும்பாபிேஷகம்
ADDED : நவ 28, 2024 07:06 AM
கடலுார்: கடலுார், பாதிரிக்குப்பம் ஊராட்சி கூத்தபாக்கம் எல்.ஐ.சி., நகரில் புதிதாக சர்வ சக்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில், கும்பாபிேஷகம், வரும் டிச., 5ம் தேதி நடக்கிறது.
பூஜைகள் வரும் டிச., 4ம் தேதி காலை 10:30 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்குகிறது. அன்று மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருத்ஸ்ங்கிரணம், அங்குராப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், கலகார்ஷனம், யாத்ராதானம், முதல்கால யாக பூஜை, நுாதன பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மூலமந்திர ேஹாமம், அஸ்த்ரேஹாமம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது.
மறுநாள் காலை 8:00 மணிக்கு விசேஷசந்தி, கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், ஸ்பரிஷாஹூதி, தத்துவார்ச்சனை, மூலமந்திரேஹாமம், அஸ்த்ரேஹாமம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, யாத்ராதானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 11:25 மணிக்கு கோபுரத்திற்கும், 11:40 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.