/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூத்த தடகள விளையாட்டு ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பரிசு
/
மூத்த தடகள விளையாட்டு ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பரிசு
மூத்த தடகள விளையாட்டு ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பரிசு
மூத்த தடகள விளையாட்டு ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பரிசு
ADDED : நவ 12, 2025 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: சென்னையில் நடந்த தெற்கு ஆசியா மூத்த தடகள விளையாட்டில் 5 கிலோ மீட்டர் நடைபோட்டியில் ஓய்வு பெற்ற, சப் இன்ஸ்பெக்டர், 3ம் இடம் பிடித்தார்.
கடலுாரை சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். தடகள பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சென்னையில் தெற்கு ஆசிய மூத்ததடகள விளையாட்டுப்போட்டி நடந்தது. கடலுாரில் இருந்து குணசேகரன் 5 கி.மீ., நடைபோட்டியில் பங்கேற்று 3ம் பரிசினை பெற்றார். கடலுாரில் உள்ள நடைபயிற்சி நண்பர்கள் அவரை பாராட்டி நினைவு பரிசினை வழங்கினர்.

