ADDED : ஜூன் 18, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், தேய்பிறை சஷ்டியையொட்டி,சுப்ரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், தேய்பிறை சஷ்டியையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் ஆகியவைகளால் சிறப்பு அபிேஷகம்; மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, காமராஜர் வீதி, பாலதண்டாயுதபாணி, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாதசுவாமி ஆகிய கோவில்களில் முருகர் சுவாமிக்கு தேய்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.