ADDED : பிப் 19, 2026 05:05 AM

கடலுார்: கடலுார் மாவட்ட தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில், சுதந்திர போராட்ட வீரர் சிங்காரவேலர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு மீனவர் பேரவை கடலுார் மாவட்ட தலைவர் சுப்புராயன், மாநில துணைத்தலைவர் டாக்டர் நாராயணன், கடலுாரில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாநகர பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி, தனியார் பஸ் தொழிலாளர் சங்க தலைவர் குரு ராமலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் சுப்புராயன், மாவட்ட அமைப்பு செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட இளைஞர் பேரவை தலைவர் வீரமுத்து, மாவட்ட இணைசெயலாளர் சண்முகம், மாவட்ட இளைஞர் பேரவை செயலாளர் மாணிக்கம், மாவட்ட ஆலோசகர் திருசங்கு, மாவட்ட ஆலோசகர் துரைராஜ், ஒன்றிய துணைத்தலைவர் குமரன், பேரவை நிரஞ்சன் மற்றும் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

