/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தந்தை ஓட்டிய ஆட்டோ கவிழ்ந்து மகன் இறப்பு
/
தந்தை ஓட்டிய ஆட்டோ கவிழ்ந்து மகன் இறப்பு
ADDED : ஆக 06, 2025 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல், 35; ஆட்டோ டிரைவர். இவரது மகன் ரோஹித், 4, விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி., படித்தார்.
முருகவேல், நேற்று காலை வழக்கம் போல, தன் மகன் ரோஹித்தை ஆட்டோவில் ஏற்றி, பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
குப்பநத்தம் சாலையில் சென்றபோது, நாய் குறுக்கே ஓடியது. இதனால், அவர் திடீரென ஆட்டோவை நிறுத்தினார்.
அப்போது, ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ரோஹித் சம்பவ இடத்திலேயே இறந்தார். முருகவேல் காயங்களுடன் தப்பினார்.
விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.