ADDED : அக் 28, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் பகுதி சுப்ரமணிய சுவாமி கோவில்களில் சூரசம்ஹாரம் நடந்தது.
கடலுார் புருகீஸ்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. நேற்று அபிஷேகம், சூரபத்மன் நகர்வலம் வருதல், சூரசம்ஹாரம் நடந்தது. ஏராளமான பக்தரகள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (28ம் தேதி) இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.
இதேப் போன்று, கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி உட்பட பல்வேறு முருகர் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடந்தது.

