ADDED : மார் 11, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு, : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தைசுவாமி சித்தருக்கு நேற்று மாசிமாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.மதியம்1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் உபயதாரர் கே.என்.பேட்டை இதயநிதி மற்றும் விழாக்குழவினர்கள் செய்திருந்தனர்.

