/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் குளத்தில் மூழ்கி மாணவர் சாவு
/
கோவில் குளத்தில் மூழ்கி மாணவர் சாவு
ADDED : மார் 19, 2024 05:58 AM

நெய்வேலி: நெய்வேலி வேலுடையான்பட்டு கோவில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
நெய்வேலி இந்திரா நகர் ஏ பிளாக் மாற்றுக்குடியிருப்பை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் கிஷோர், 14; என்.எல்.சி., பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் வேலுடையான்பட்டு கோவில் தெப்பக்குளத்தில் குளிக்க சென்றார். அப்போது, கிஷோர் குளத்தில் மூழ்கினார்.
அவருடன் குளித்த சக மாணவர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் அழுதுகொண்டே கத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடினர். இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று காலை 8:00 மணியளவில், மீட்புக்குழுவினர் மாணவர் கிஷோரை சடலமாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

