/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டேக்வாண்டோ போட்டிகளில் பதக்கங்கள் குவிப்பு; அரசு சார்பில் சிங்கப்பூர் சுற்றுலா சென்ற மாணவர்
/
டேக்வாண்டோ போட்டிகளில் பதக்கங்கள் குவிப்பு; அரசு சார்பில் சிங்கப்பூர் சுற்றுலா சென்ற மாணவர்
டேக்வாண்டோ போட்டிகளில் பதக்கங்கள் குவிப்பு; அரசு சார்பில் சிங்கப்பூர் சுற்றுலா சென்ற மாணவர்
டேக்வாண்டோ போட்டிகளில் பதக்கங்கள் குவிப்பு; அரசு சார்பில் சிங்கப்பூர் சுற்றுலா சென்ற மாணவர்
ADDED : ஜூன் 11, 2025 07:50 PM

கடலுார்'; கடலுார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர், டேக்வாண்டோ போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவித்து பாராட்டைப்பெற்றுள்ளார்.
கடலுார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஷர்வேஷ்,15. பத்தாம்வகுப்பு படிக்கிறார். இவர் 2022ம் ஆண்டிலிருந்து மாநில, தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார். கடந்த 2022 23ம் ஆண்டில் பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகளில் 14வயதிற்குபட்டோருக்கான பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 2023 24ம் ஆண்டிலும் பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.
2024 25ம் ஆண்டு இந்திய பள்ளி விளையாட்டுக்கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அரசு சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்துச்சென்றது. பதக்கங்களை குவிக்கும் மாணவர் ஷர்வேஷை, கடலுார் தொகுதி எம்.எல்.ஏ., அய்யப்பன் பரிசு வழங்கு பாராட்டினார்.
நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் நிஷா, மீனாட்சி சுந்தரம், பயிற்சியாளர் இளவரசன் மற்றும் பெற்றோர் பெரியசாமி, சிந்து ஆகியோர் மாணவரின் பயிற்சிக்கு உறுதுணையாக இருந்து வெற்றிகளை குவிக்க ஊக்குவித்து வருகின்றனர்.