sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அனுமதி மீறி மண் எடுத்து விற்பனை: ஒன்றிய கூட்டத்தில் புகார்

/

அனுமதி மீறி மண் எடுத்து விற்பனை: ஒன்றிய கூட்டத்தில் புகார்

அனுமதி மீறி மண் எடுத்து விற்பனை: ஒன்றிய கூட்டத்தில் புகார்

அனுமதி மீறி மண் எடுத்து விற்பனை: ஒன்றிய கூட்டத்தில் புகார்


ADDED : பிப் 17, 2024 11:50 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: வி.கே.டி.சாலைக்கு அனுமதி பெற்று, முறைகேடாக மண் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பண்ருட்டி ஒன்றிய குழு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், சேர்மன் சபா பாலமுருகன் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., க்கள் சங்கர், சக்தி, துணை சேர்மன் தேவகி முன்னிலை வகித்தனர். டாக்டர் அறிவொளி, துணை பி.டி.ஓ.க்கள் ராஜ்குமார், சுடர்வேல்மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீதான விவாதம் நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர் தேவநாதன் பேசுகையில், எனது வார்டில் சாலை அமைக்க பூஜை போட்டு 4 மாதங்கள் ஆகியும் போடவில்லை. அதே போன்று, எம்.எல்.ஏ., நிதியில் போடப்பட்ட போர்வெல் உபயோகமில்லாமல் உள்ளதாக தெரிவித்தார்.

குமரன் (அ.தி.மு.க.,) பேசுகையில், அழகப்ப சமுத்திரம் பகுதியில் வி.கே.டி., சாலைக்காக மண் எடுக்க 4 ஏக்கர் பரப்பளவில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 21 ஏக்கர் அளவிற்கு முறைகேடாக மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. விதிமீறி மண் எடுத்ததால் அப்பகுதி விவசாயிகள் பாதித்துள்ளனர். எனவே, மண் எடுத்தவர்கள் மீது ஒன்றியம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த சேர்மன், இப்பிரச்னை குறித்து ஒன்றியம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி கனிம வளத்துறைக்கு புகார் செய்யப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us