ADDED : செப் 02, 2025 03:33 AM
புவனகிரி: புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு மெயின் ரோட்டில் இருந்து 3 கி.மீ., தொலைவில் அழிச்சிகுடி வரை செல்லும் தார் சாலை உள்ளது. இப்பகுதி அத்தியாவசிய தேவைக்கு புவனகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இந்த சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதற்கிடையே, நபார்டு திட்டத்தில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது.பணிகள் துவங்கிட கிராம ஊராட்சி அலுவல வளாகத்தில் ஜல்லிகள் கொட்டி 1 மாதமாகிறது.
ஆனால் இதுவரை பணிகள் துவங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் , பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சாலை பணியை உடனடியாக துவங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.