sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கள்ளிப்பாடி - காவனுார் இடையே தற்காலிக சாலை துண்டிப்பு

/

கள்ளிப்பாடி - காவனுார் இடையே தற்காலிக சாலை துண்டிப்பு

கள்ளிப்பாடி - காவனுார் இடையே தற்காலிக சாலை துண்டிப்பு

கள்ளிப்பாடி - காவனுார் இடையே தற்காலிக சாலை துண்டிப்பு


ADDED : டிச 04, 2024 06:18 AM

Google News

ADDED : டிச 04, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் கள்ளிப்பாடி- காவனுார் தற்காலிக சாலை துண்டிக்கப்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கள்ளிப்பாடியில் இருந்து காவனுார் இடையே பாலம் கட்டுமான பணி நடக்கிறது.

அதற்காக, 10 கிராமங்கள் பயன்பெறும் வரையில் தற்காலிக சாலை போடப்பட்டிருந்தது.

கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். நேற்று மதியம் வரை கள்ளிப்பாடி வெள்ளாற்றில் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் வந்த பொதுமக்கள் சாலையை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொலாந்துறை அணைக்கட்டில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டது.

இதனால் நேற்று மதியத்திற்கு மேல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தது.

இதனால் தற்காலிக சாலை துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காவனுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஸ்ரீமுஷ்ணத்திற்கு வர கருவேப்பிலங்குறிச்சி சென்று 27 கி.மீ. சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us