
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் உற்சவர்களுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, துாங்கானை மாடம் திருவாசக பேரவை சார்பில், சேலம், ஆத்துார், நாமக்கல், சிதம்பரம், விருத்தாசலம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் நேற்று காலை முதல் மதியம் 3:00 மணி வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

